கொலைகாரனின் கடைசி நிமிசங்கள் பொலிசார் சுட்டு அதே இடத்தில் இறந்த சம்பவம்
அமெரிக்காவில் தான் இது போன்ற பல சைக்கோக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு அங்கே நிலமை பெருகியுள்ளது. நேற்றைய தினம் ஒகையோ மாநிலத்தில் , உள்ள பல்கலைக் கழகம் ஒன்றினுள் புக முற்பட்டு 9 மாணவர்களை கைத்தியால் குத்திய ஆயுததாரியை பொலிசார் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
குறித்த நபரிடம் கைத்துப்பாக்கியும் இருந்துள்ளது. இவரது நோக்கம் பலரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு. பின்னர் துப்பாக்கியை எடுத்து சுட்டு, அதிலும் ஒரு 10 பேரைக் கொன்றுவிடுவது தான். இது போன்று மனிதர்களின் மன நிலை ஏன் மாறுகிறது என்று தெரியவில்லை. இருப்பினும் போதைப் பொருளுக்கு அடிமையாகும் நபர்களே இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது.
No comments: