லண்டனில் தமிழர்களே உங்களுக்கும் இவ்வாறு நடக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்
லண்டனில் மின் ஹா என்னும் சீன நபர், எதேட்சையாக வீடு ஒன்றை வாங்க தேடிக்கொண்டு இருக்கும் போது. தனது வீடு விற்ப்பனைக்கு போட்டுள்ளதை பார்த்து அதிர்ந்து போனார். யுவர் மூவ் என்னும் எஸ்டேட் நிலையமே குறித்த நபரின் வீட்டை விற்பனைக்கு போட்டுள்ளது. இதனை தான் செய்யவில்லை என்று அவர் கூறியது அன் நிறுவனம் ஆடிப்போய்விட்டது.
குறித்த சீன நபரின் பெயர் மற்றும் அனைத்து தகவல்களையும் திருடிய ஜகானி என்னும் இந்திய வம்சாவழி நபர் அனைத்தையும் பாவித்து. தானே வீட்டின் உரிமையாளர் என்று கூறி வீட்டை விற்பனைக்கு போட்டுள்ளார். வீடு விற்கப்பட்டு இருந்தால் குறித்த பணம் அவரது வங்கிக்கே சென்றிருக்கும். தனியாக அந்தப் பெயரின் ஒரு பாங் எக்க்கவுண்டை அவர் திறந்தும் வைத்திருந்துள்ளார்.
பொலிசார் இந்த வழக்கை விசாரித்தவேளை மேலும் ஆடிப்போனார்கள். ஜகானி கைகளில் மேலும் பலரது விபரங்கள் இருந்துள்ளது. நேற்றைய தினம்(திங்கள்) நடந்த நீதி விசாரணையில் அவருக்கு 7 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
No comments: