Header Ads

தந்தையை மான் என நினைத்து தெரியாமல் சுட்டுக்கொன்ற சம்பவம்..! அமெரிக்காவில்



அமெரிக்காவில் மான் வேட்டையின் ஈடுபட்டக் கொண்டிருந்த மகன் தனது தந்தையை மான் என நினைத்து தெரியாமல் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நியூயார்க்கின் Sandy Creek பகுதியில் Kevin D Paro (58) என்பவரும் அவருடைய 24 வயதுடைய மகன் Kristopher D Paro இருவரும் தங்கள் வீட்டின் பின் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது Kevin D Paro காட்டின் உட்பகுதியில் மானை தேடிக் கொண்டு இருந்தார்.இந்த நிலையில் ஒரு மரத்திற்கு பின் புறம் மான் சத்தத்தை கேட்டு அவருடைய மகனான Kristopher D Paro தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

   
ஆனால் அங்கு அவருடைய தந்தை தான் இருந்துள்ளார். குண்டு அவரது மார்பில் பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த Kristopher D Paro ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது தந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் அவர் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொந்த தந்தையே மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.