Header Ads

300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த பெண் லண்டனில் அதிர்ச்சி



பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் நடைபயணம் மேற்கொண்ட போது 300 அடி பள்ளத்தில் கிழே விழுந்து உடல் சிதறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவருடன் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள Madeira பகுதிக்கு சென்றுள்ளார்.அங்கு சென்ற அவர்கள் குறுகிய மலைப்பகுதிகள் மற்றும் காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் Levada do Norte என்ற பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் 300 அடி உயரம் உள்ள Ribeira Brava என்ற பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்றுள்ளனர்.

   
அப்போது Eira do Mourao என்ற பள்ளத்தாக்கில் இருக்கும் பாலத்தின் மீது ஏறி அப்பெண் நடந்துள்ளார். அப்போது ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக அவர் நிலைதடுமாறி கிழே விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அப்பெண்ணின் கணவர் உடனடியாக அப்பகுதியில் உள்ள மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

No comments:

Powered by Blogger.