Header Ads

யாழில் வாள்வெட்டுக்கு இலக்கான இவரை அடையாளம் தெரியுமா மக்களே



யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி ஜெயவீர, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்.

45 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க மேற்படி நபர் கடந்த 16ஆம் திகதி இரவு கல்லுண்டாய் வெளிபகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்த போதே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பலத்த வாள்வெட்டுக்கு இலக்கான மேற்படி நபர், பேசமுடியாத நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்ததால் எந்த தகவலையும் பொலிசாரால் அறியமுடியவில்லை என்று அதிர்வின் யாழ் புலனாய்வு நிருபர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Powered by Blogger.