லண்டனில் களமிறக்கப்பட்டுள்ள அதிரடிப் பொலிஸ் பிரிவு றோபோ போன்ற ஆயுதங்கள்
றோபோ போன்ற ஆயுதங்கள் தாங்கிய அதிரடிப் பொலிஸ் பிரிவு லண்டனில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று அன் நாட்டின் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. குறித்த பொலிசார் சந்தேக நபர்களை கண்டால் அவர்கள் தாக்குதல் நடத்த முன்னரே அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் என்னவென்றால் இவர்கள் ஒரு வகையான கண் சாதனத்தை பொருத்திக்கொண்டு தான் நடமாடுகிறார்கள். இதனூடாக அவர்களால் மனித உடலை உற்றுப் பார்க்க முடியும் என்றும். மனித உடலில் வெடி பொருட்கள் அல்லது ஆயுதங்கள் மறைத்து வைத்திருப்பின் அதனை உடனே அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
சினிமா படங்களில் றோபோ என்னும் இயந்திர மனிதன் தான் இவ்வாறு செயல்களை செய்வான். ஆனால் தற்போது இந்த டெக்னாலஜி மனிதர்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.
No comments: